Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 தோட்ட பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

5 தோட்ட பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு ஆகிய ஐந்து தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியின் காரணமாக 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாட்டின் ஏற்றுமதி வருமானம் 1,118 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் 2023 வரை இந்தத் தோட்டப் பயிர்கள் மூலம் ஈட்டிய ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும்.

இதன்படி, கடந்த வருடத்தின் முதல் நான்கு மாத கால ஏற்றுமதி வருமானத்தை விட இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 234 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தேயிலைத் தோட்டங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ள வீதிகளை இலங்கை தேயிலை சபையினால் ஒதுக்கப்பட்ட பணத்தில் புனரமைப்பதற்கான பணி உத்தரவை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Keep exploring...

Related Articles