Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவத்தளையில் வீடொன்றில் தீப்பரவல்: ஒருவர் பலி

வத்தளையில் வீடொன்றில் தீப்பரவல்: ஒருவர் பலி

வத்தளை, மாட்டாகொடை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், மூன்று மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

90 வயது முதியவர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மட்டும் வீட்டில் தனியாக தங்கியிருந்ததாகவும், இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles