தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையின் முடிவில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனுவின் உத்தரவை எதிர்வரும் 9 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிணையில் விடுவிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த இடைக்கால கோரிக்கை மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஆகஸ்ட் முதலாம் திகதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.