Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை தெரிவு செய்யுமாறு பணிப்புரை

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை தெரிவு செய்யுமாறு பணிப்புரை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடக் கோரி, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles