Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

அனுராதபுரம், கல்குளம பிரதேசத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி-யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கல்கும பகுதியில் படுகாயமடைந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Keep exploring...

Related Articles