Monday, January 19, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

குரோஷியாவில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு தில்வார் நகரில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவர் உணவகம் ஒன்றில் தங்கியிருந்த போது உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles