Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 9 பேர் கைது

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 தமிழக மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Keep exploring...

Related Articles