Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 சொகுசு பேருந்துகள் மோதி கோர விபத்து: ஒருவர் பலி

2 சொகுசு பேருந்துகள் மோதி கோர விபத்து: ஒருவர் பலி

மல்சிறிபுர, பன்லியந்த பிரதேசத்தில் இரண்டு சொகுசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (17) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும், கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மட்டக்களப்பு பேருந்தின் சாரதி படுகாயமடைந்து பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles