Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (14) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் 60-65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒல்லியான உடலைக் கொண்ட இவர் கடைசியாக சட்டை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles