Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனு இன்று பரிசீலனை

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனு இன்று பரிசீலனை

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (15) பரிசீலிக்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தி அங்கீகரிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவடுனவால் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles