இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (11) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 3 படகும், அதிலிருந்த 13 இந்திய மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.