Wednesday, March 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் நிலைய அதிபர்கள் தொடர்ந்து போராட்டம்

ரயில் நிலைய அதிபர்கள் தொடர்ந்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதோடு ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வேலைநிறுத்தம் அமுலில் இருந்த போதிலும், நேற்று சுமார் 70 ரயில் பயணங்கள் நடத்தப்பட்டதாக ரயில்வே பதில் பொது மேலாளர் எஸ்.எஸ்.முதலிகே குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles