Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை குறித்த அறிவிப்பு

மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை குறித்த அறிவிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத்சந்திரயினால் குறித்த மனுவை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Keep exploring...

Related Articles