Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது

அத்துருகிரியவில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுருகிரிய நகரின் ஒருவல பகுதியில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நேற்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

முகமூடி மற்றும் தொப்பி அணிந்து வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிதாரிகள் குறித்த வர்த்தக நிலையத்துக்குள் அங்கு அமர்ந்திருந்த பிரபல தொழிலதிபர் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் க்ளப் வசந்த உட்பட இருவர் பலியாகினர்.

இந்நிலையில், க்ளப் வசந்தவின் மனைவி மற்றும் பிரபல பாடகி சுஜீவா ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles