Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி

இந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்கம் சுரங்கமொன்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சுரங்கத்திலுள்ள சிறு குழிகளில், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 12 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், காணமற்போயுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles