தென் அமெரிக்காவின் பெரு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும் என இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பெருவின் அதிகுய்பா மாவட்டத்தில் இருந்து 8.8 கிமீ தொலைவில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.