Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் தாய்ப்பால் புரைக்கேறி பச்சிளம் சிசு பலி

யாழில் தாய்ப்பால் புரைக்கேறி பச்சிளம் சிசு பலி

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையொன்று நேற்று (26) பிற்பகல் தாய்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.

இணுவில் பிரதேசத்தில் வசிக்கும் தாயொருவர் தனது 40 நாட்களே ஆன தனது மகளுக்கு பால் புகட்டி படுக்கையில் வைத்திருந்ததாகவும், சிறிது நேரத்தின் பின்னர் பதில் கிடைக்காமையால் தெலிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சிறுமியின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதில் தாய்பால் புரைக்கேறி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles