Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் மரணம்

மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் மரணம்

கல்கிரியாகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கல்கிரியாகம, திக்வண்ணாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் மின்சாரம் தாக்கியதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செனவிரத்ன முதியன்சேலாகே பசிந்து காஞ்சன பண்டார என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்டுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி அவர்உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவன் உடனடியாக அடியாகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவனின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (26) இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles