கென்யாவில் சா்ச்சைக்குரிய வரிவிதிப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாராளுமன்றத்துக்குள் நேற்று நுழைந்து தீவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த மசோதாவில் பொருட்களுக்கான புதிய வரி விலக்கப்பட்டது.
இருந்தாலும், அந்த மசோதாவை முற்றிலும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வரிவிதிப்பு மசோதா பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அது நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக போராட்டக்காரா்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்ததுடன், இதில் அந்த வளாகத்தின் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்