நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (25) யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முட்டாஸ் கட சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 28 கிராம் 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.