Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதல் உறவு காரணமாக கையை இழந்த இளைஞன்

காதல் உறவு காரணமாக கையை இழந்த இளைஞன்

காதல் உறவினால் கை துண்டாடப்பட்ட நிலையில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நேற்று 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் தனுஜன் எனும் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டாடப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles