செய்திகள்உள்நாட்டுஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஜெட்டாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்-ஹாஜ் ஆதம் லெப்பை அப்துல் கஃபூர் என்ற 68 வயதான குறித்த நபர் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மக்காவில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்றப்பட்ட நிலையில். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடதையடுத்து உயிரிழந்தார்.

இவரின் ஜனாஸா மக்காவில் உள்ள அப்துல் அஜீஸ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles