Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கம்பத்தில் மோதிய பேருந்து - பல பகுதிகளில் மின்தடை

மின் கம்பத்தில் மோதிய பேருந்து – பல பகுதிகளில் மின்தடை

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

இதன் காரணமாக ஹல்பே தொடக்க ஹல்தமுல்ல வரையான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை தொடக்கம் தியத்தலாவ பகுதி வரை 33,000 அதிவேக மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்கம்பமே இவ்வாறு உடைந்து வீதியில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் பயன்பாடுகள் எவருக்கும் ஆபத்தில்லை என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles