கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.