Monday, June 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு

ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு

கைப்பேசியில் ஹேண்ட் ஃப்ரீயை போட்டுக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த இளைஞன் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் இமாத் என்ற 21 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி சென்றுள்ளதாகவும், அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles