அஹுங்கல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெந்தரஇ கஹபிலியகந்த பிரதேசத்தில் வைத்து கொஸ்கொட பொலிஸாரால் அவர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய நில்லத்தன பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.