Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி

விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி

இந்தியாவின் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சிறுவர்கள்கள் உள்ளிட்ட 27 பேர் உயிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles