Wednesday, August 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி இளைஞர்கள் மூவர் பலி

ரயில் மோதி இளைஞர்கள் மூவர் பலி

காலி, புஸ்ஸ மற்றும் பிந்தலிய சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

18, 19 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கில்லமண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸஇ பிந்தலிய சந்தியில் உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த மூன்று இளைஞர்களும் நேற்று (23) தன்சலுக்கு சென்று கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles