Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விபத்தில் 6 வயது சிறுவன் பலி

கார் விபத்தில் 6 வயது சிறுவன் பலி

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவில் நேற்று (23) காலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கார் சேருநுவரயிலிருந்து சேருகல் நோக்கி ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை முதல் மட்டக்களப்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி தூங்கியதால் கார் வீதியை விட்டு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles