முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
டயனா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.