Wednesday, May 28, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசின் தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசின் தீர்மானம்

இந்த வருடம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தித் துறையைச் சேர்ந்த பல தொழிலாளர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் மீண்டுமொரு சம்பள அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும், இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு ஏற்பட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles