Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் ஹிங்குரன்கொட நகரில் மூடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு மயானம் உள்ளதுடன், அங்கிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் எதற்காக இந்த மயானத்திற்குச் சென்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிங்குரன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த நபர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் ஹேரத் முதியன்சேலாகே அஜித் சமந்த செனவிரத்ன என்ற 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles