Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

ஸ்லோவாக்கியாவின் – ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார மாளிகைக்கு வெளியே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் முக்கிய தேர்தலாக கருதப்படும் ஸ்லோவாக்கியாவின் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles