Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்

O/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்

இன்றுடன் நிறைவடையும் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என அந்த மாணவிகள் இருவரின் பாதுகாவலர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்

இவ்விரு மாணவிகளும் நேற்று (14) பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அதிலொரு மாணவி, பெற்றோருடன் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு மாணவிகளும் நண்பிகள் என்றும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்துக்கு அண்மையில் இவ்விருவரும் நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்ததை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் பலரும் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles