இலங்கைக்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 835/2, கடகேவத்தை வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் நேற்று (14) விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,580 மான்செஸ்டர் ரக சிகரெட்டுகள் மற்றும் 20 ஆர்கோஸ் சுவிட்ச் ரக சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன் சந்தைப் பெறுமதி 2 இலட்சம் ரூபாவாகும் என விசேட அதிரடிப்படையினர் மதிப்பிட்டுள்ளனர்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.