Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து மின்னல் தாக்கி புல்தரையில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளும் ஒரு பசுவும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே வீதியில் கலமுதுன தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 4 மாடுகள் கடந்த 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கிய இடத்தில் பெரிய பள்ளம் இருந்ததாகவும், இறந்த விலங்குகளின் மதிப்பு 8 இலட்சம் ரூபா என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles