Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபர் கைது

போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபர் கைது

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 1440 மாத்திரைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து மட்டக்களப்பு ரயில்வே குறுக்கு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேள‍ை வீதியில் பயணித்த குறித்த காரை நிறுத்தி சோதனையிட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட காரை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும், கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles