தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதியம்,அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பரசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.