Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் தொடர்பான விசாரணை அறிக்கையை கோரும் நீதிமன்றம்

ஜெரொம் தொடர்பான விசாரணை அறிக்கையை கோரும் நீதிமன்றம்

ஜெரொம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோவை கைது செய்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசன சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு கோரி அனைத்து மதத் தலைவர்களாலும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Keep exploring...

Related Articles