Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகரட் துண்டொன்று தொண்டையில் குழந்தை பலி

கரட் துண்டொன்று தொண்டையில் குழந்தை பலி

அனுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின் தாய் வைத்துள்ளார்.

பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை அந்த குழந்தை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அந்த கரட் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்குண்டதை அடுத்து நொச்சியாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles