கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைகளை சேர்ந்த கடற்படையினர் நேற்று (08) கிளிநொச்சி, குடாரப்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 06 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வெற்றிலக்கேணி மற்றும் சாலே கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 05 மீனவர்கள், இரண்டு படகுகள் மற்றும் பிடிபட்ட மீன்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 21 – 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களையும் உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் யாப்பண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அலுவலகத்தில் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.