ரம்புக்கனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து நேற்று (07) பிற்பகல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடிகமுவ, லபுகொல்லவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.