Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

ரம்புக்கனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து நேற்று (07) பிற்பகல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடிகமுவ, லபுகொல்லவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதே விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles