Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரித்தானிய இராஜதந்திரிகளை சந்தித்தார் அனுர

பிரித்தானிய இராஜதந்திரிகளை சந்தித்தார் அனுர

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசிபிக் பிராந்திய பணிப்பாளர் Ben Mellor மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(06) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், பிராந்திய புவிசார் அரசியலின் சவாலான நிலைமைகள் மற்றும் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதானி ஹூமைரா ஹாஷியா, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles