Sunday, May 19, 2024
26.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுதொடரின் நடுவே திடீரென நாடு திரும்பிய பத்திரன

தொடரின் நடுவே திடீரென நாடு திரும்பிய பத்திரன

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் விரைவில் குணமடையவும் அந்த அணியின் நிர்வாகம் வாழ்த்தியுள்ளது.

அவருடைய தொடையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான மருத்துவ நடவடிக்கைகளுக்காகவே அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷ பத்திரன 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles