Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவர் கைது

2 கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவர் கைது

இரண்டு கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவரை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நீண்டகாலமாக இந்த கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை பாரியளவில் நடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது 27,367 கிலோகிராம் கழிவு தேயிலையை விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (25)இந்த சுற்றிவைளப்ணுபு மெற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் உலப்பனே பிரதேசத்தை சேர்ந்த 38 மற்றும் 60 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் தவுலாகல மற்றும் நவகுருதுவத்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles