Sunday, March 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேவ ஆராதனையின் போது பெண் ஒருவர் மரணம்

தேவ ஆராதனையின் போது பெண் ஒருவர் மரணம்

மதுரங்குளி பொலிஸ் பிரிவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தேவ ஆராதனையின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லம, வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் மற்றும் சளி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

போதகர் பிரார்த்தனை செய்து அந்த தண்ணீரை பெண்ணுக்கு குடிக்க கொடுத்த பிறகு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பெண் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles