Sunday, March 22, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனை மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ரயில்வே தலைமைப் பொறியாளர் (வீதிகள் மற்றும் தொழில்கள்) மற்றும் மேலதிக பொது முகாமையாளர் (உள்கட்டமைப்பு) உள்ளிட்ட பல உயர் பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles