2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை மே 20 ஆம் திகதி தொடங்க உள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர 2023/2024 பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.