Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்கள் மூவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையர்கள் மூவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 3 பேரே இவ்வாறு நேற்று காலை தனுஷ்கோடி – ஐந்தாம் மணல் திட்டு பகுதியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி – பூநகரி பகுதியிலிருந்து அவர்கள் படகு மூலமாக சட்டவிரோதமாக தமிழகத்துக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, இராமேஸ்வரம் கரையோர பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் கரையோர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles