Wednesday, May 28, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதியத்தலாவ விபத்து - வாகன ஓட்டுனர்கள் இருவர் விளக்கமறியலில்

தியத்தலாவ விபத்து – வாகன ஓட்டுனர்கள் இருவர் விளக்கமறியலில்

தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் வாகன ஓட்ட பந்தயத்தின் போது 7 பேரின் உயிரை காவு கொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles